Saturday, May 28, 2011

கடல்

கூதல் காற்று வீசும் நாட்களில்
யாரும் கடலுக்குச் செல்வதில்லை

மனித ஓலங்களையொத்த
அலைகளின் சத்தம்
கடலுக்கப்பால்
என்னவுள்ளதென அறியத்தூண்டும்

கல்லும் மண்ணும் தோன்று முன் தோன்றிய
இனமுள்ள அழகிய தீவொன்றுளது
கடலுக்கப்பால்

கால்கள்
கைகள்
கண்கள் இழந்தோரும்
வன்முறைக்குப் பலியானோரும்.....

பெருந்தீயெரிந்து ஓய்ந்து
கனலுந் தணல்களுள்ள
என் நிலம் பசுமையோடிருந்தது முன்னோரு காலத்தில்.

No comments:

Post a Comment