Showing posts with label tamil poems. Show all posts
Showing posts with label tamil poems. Show all posts

Wednesday, September 11, 2013

தலைப்பிடாத கவிதைகள்


ஆற்றங்கரையில்
வாழ்வின் துடிப்போடும்
உந்துதலோடும்
அதன் கருமிளகுக் கண்களில்
என்னைக் காட்டுமளவுக்கு
மிக அருகில் வந்து
பாடலிசைத்துப் பறந்து மறைகிறது சிறு குருவி
நானோ காற்றில் மிதக்கும் பாடலோடு
ஆற்று வெளியெங்கணும்
பரந்து கலக்கிறேன்

-----------------

படகு விடும் சிறுவரையும்
கண் மூடியுலகு மறந்த பெண்களையும்
நீர் குடைந்து விளையாடும் ஆண்களையும்
கண் கொள்ளாது
பட்ட மரக்குவியல் மீதமர்ந்து
மென்னிறகு கோதும் நீல நாரை
ஆற்றினுட் துள்ளும்
அதன் அலகுகளறியாச் சிறுமீன்

--------------------