Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, September 23, 2013

கவிதைகளிரண்டு

மழை நீரிலூறிய பாசி போன்ற
உனது உன் மத்தம்
நெய்தல் நிலமெனப் பரந்த
எனதுடலின் மீது
நண்டுகளின் வேகங் கொண்டு
ஊருமுன் விரல்கள்
சிப்பியொன்றைப் பிரிக்கும்
பறவையின் வேகத்தோடு
இயங்கும் உனதிதழ்கள்
களி கொண்டு
 நாம்முயங்கும் வேளை
மேற்றிசை நிலவும்
குட்டியீன்ற மானும்
நிலை மறக்கின்றன
ஒரு கணம்
______________________

துளிரிலை
குருத்திலை
இளம் பச்சிலை
பழுத்த இலைப் பேதமற்று
பருவந் தப்பி
நோயுற்ற
இலைகள்  வீழ்தற் போல
விழுந்தன உடல்கள்
______________________

Saturday, May 28, 2011

கடல்

கூதல் காற்று வீசும் நாட்களில்
யாரும் கடலுக்குச் செல்வதில்லை

மனித ஓலங்களையொத்த
அலைகளின் சத்தம்
கடலுக்கப்பால்
என்னவுள்ளதென அறியத்தூண்டும்

கல்லும் மண்ணும் தோன்று முன் தோன்றிய
இனமுள்ள அழகிய தீவொன்றுளது
கடலுக்கப்பால்

கால்கள்
கைகள்
கண்கள் இழந்தோரும்
வன்முறைக்குப் பலியானோரும்.....

பெருந்தீயெரிந்து ஓய்ந்து
கனலுந் தணல்களுள்ள
என் நிலம் பசுமையோடிருந்தது முன்னோரு காலத்தில்.

Thursday, May 19, 2011

தலைப்பிடாதது

தொலைவிலிருந்து பாடல் கேட்கிற இரவொன்றில்
காதலில் சுடர்கின்றன உன் கண்கள்
கூரையிடுக்கினூடு கசியும் நிலவைக் காட்டி
இடது தோளில் ஏதோ வரைகிற விரல் நுனிகள்
பின் தயக்கத்தோடு
ஒரு குழந்தையின் கன்னங்களை வருடுவது போல
என் மார்பின் மென்மையை மெதுவாய் வருடுகின்றன

                                           இரவுக்கு இறக்கைகளில்லை
                                           நிலவும் நகர்வதாயில்லை

முத்தமிடுகையில் இடறும் மூக்குத்தி
சர்ப்பங்களிரண்டு சீறுவது போல மூச்சொலி
பற்கள் காயப்படுத்தி விடக்கூடாதென
மிகுந்த கவனத்தோடு
உனது முத்தம் மெதுவாக வேர் பிடிக்கிறது

                                         நிலவு மறைந்து போகிறது
                                         இரவு நீள்கிறது.

Wednesday, April 27, 2011

லொட்டின் மனைவி
-------------------
கோடைமழையில்
நெகிழ்ந்து பூக்கத் தொடங்கியிருந்த
முற்றத்து வேம்பு தெரிகிறதாவெனப்
பார்க்கவே திரும்பினேன்
கடைந்த தயிரை மறந்து விட்டேன்
காய்ப் போட்ட நெல்லு மணிகளைப்
புலுனிகள் தின்னத் தொடங்கியிருக்கும்
கிணற்றடியில் காய்கிற துணிகளை
யார் மடிப்பார்கள்?

கோடை நிலம் சுடுவது பற்றி லொட்டுக்கு
ஒரு கவலையுமில்லை
வீண் தாமதமென்று
செருப்புகளைத் தேட விடவில்லை

சுருண்டெழும் புகையினூடு
வெளிச்ச வீடு தெரிகிறது
கடலும் அதன் நீலமும்
உப்பின் சுவையூறிய கிளிஞ்சல்களும்
பரந்த மணல் வெளியும்.....

செத்த மீன்கள் கரையொதுங்குவது நிற்கவில்லை
உருக்குலைந்த உடல்களும் 
ஏதோ ஒரு நம்பிக்கையில் அடையளங் காண்கின்றனர்

கோயில் குளம் மட்டும் எப்போதும் தாமரைகளாகப் பூத்தபடி

கந்தகப் புகைக்கும் மனித ஓலங்களுக்கும் நடுவே
யாராவது 'போகாதே' என்று கூப்பிட மாட்டார்களாவென 
எண்ணியே திரும்பினேன்

திருப்பிய கழுத்தை
மீண்டும் அசைக்க முடியவில்லை
கால்கள் நகரவில்லை

பாற்கடலில் மேரு போல
மின்சாரம் பாய்ச்சியது போல
உயிர் சுழன்றது 

சிறு நீர்த்துளியெனக் கடைசியாகக் கண்ட காட்சியும்
உணர்ந்த உணர்வும் என்னுளுறைந்தன.

Monday, July 19, 2010

மாற்றம்
ஒரு மாற்றமுமில்லை
முன்பே வந்தவர்கள்
புதிதாய் வருபவர்கள்
யாராலோ அழைத்துச் செல்லப்படுபவர்கள்

ஒரு மாற்றமுமில்லை

அதே கூடாரம்
அதே கழிப்பறை
மூத்திர நெடிலடிக்கும் மூலை
வன்புணர்வு

ஒரு மாற்றமுமில்லை


போர் முடிந்து
அமைதி நிலவுவதாயும்
மக்கள் ஆனந்தித்திருப்பதாயும்
செய்தியில் வாசிக்கிறார்கள்.
குழி - 01
(இன்றைய) போர் முடிந்து
சிறு ஓய்வு.
குழியிலிருந்து தலை நீட்டத் தெரிவது
நீளும் புகைச் சுருள்களும்
காற்றில் பறக்கும் எரிந்த மிச்சங்களும்.
வீதி, வீடு, கடை
மரம், காகம், சைக்கிள் எதுவுமில்லை.
நிலமே இல்லது போய் விடும் போல.
சாம்பலும், எலும்புகளும், கந்தக வாடையுமே மிச்சம்.
பயம்?
இனிமேல் பயந்து என்னவாகப் போகிறது?
இன்னும் கொஞ்சம் கறுத்தால்
ஒரு சிலராவது வெளிய வருவார்கள்
முன்னேறிச் சென்று உயிர் தப்ப.
குழி - 02
நிரந்தரமானதல்ல.
அடுத்த நிமிடம் எங்கேயென
யாருக்குந்தேரியது.
ஐந்து பேருக்கு மட்டுமேயான குழி.
ஆனால் பதினைந்து பேருள்ளே.
ஒரே புழுக்கம்.
உடலை நெளித்து வளைத்து
காற்றைக் கூப்பிடுகிறோம்
மண்புளுப் போல.

சிறிதும் பெரிதுமாக
உட்பக்கமாகத் தலை நீட்டும் வேர்கள்.
என்ன மரமென்று யாரையுங் கேட்க முடியாது.
சினந்து கொள்வர்.

சின்னதாகக் கரும் பூச்சியொன்று கூடக் குழி பறிக்கிறது.
மூலையில் சிறிதாய் நெடுக்கும் புல்லுத்துண்டு.

பாவம் முறிகண்டிப் பிள்ளையார்.

தலைக்கு மேல் தெரிந்த
இடை வெளிக்குள்ளால்
வானத்தைப் பார்க்கிறாள்.
பகல் கூட இரவு போல ஒரே கறுப்பு.

Sunday, July 18, 2010

வாக்கு மூலம்
அவர்கள் அழுதனர்
என் காதுகள் செவிடாயிற்று
மன்றாடினார் முகம் திருப்பிக் கொண்டேன்
காலில் விழுந்தனர்
நகர்ந்து பின் வாங்கினேன்.

நீ கல்லா என்றனர்
என் மீது மண் அள்ளி வீசினர்
நானோ மனிதனாயிருக்கவில்லை
ஒன்றல்ல
பல தடவைகள்.
கொன்றவர்கள் பெயர் விபரம் மனப்பாடம்.

அவர்களது ஓலம்
என்னைச் சூழ நீரெனப் பெருகுகிறது
ஒரு கல்லென நான் அமிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அம்மா, நான் உன் மகனல்ல என்கிறாய்
எனக்குச் செத்துப் போகத் துணிவிருக்கவில்லை.
------------------------------------

Monday, June 01, 2009

தமிழ்

njhiyT

kPz;Lk; xU mofpa ,uT
nksdkhff; ftpfpwJ.
vd; tPnldf; fhl;b kfpOk;
fl;llf; $l;bd; Nkw;Nf epytpy;iy
kuq;fSkpy;iy.

cah; fl;llq;fs;
Kd;gpd;dwpah khe;jh;
Mz; ez;gh;fSld;
fhjiyg; Ngrpg; gfph;e;J
,uit ,d;GWk; gjpd;kg; ngz;fs;
kPz;Lk; xU mofpa ,uT ngUefhpy;.

rPdg; ngz;zpirf;Fq; Foypir
FWtl;Lfspy; ehd; Nrh;j;j ,ir
vJTNk Nghjtpy;iy.
vd; jdpikia vs;sp
xU ngUk; tiynad cyfpd; kPJ tpOfpwJ
,e;j mofpa ,uT.
,g;gb ,e;j ,uTk;
,d;Dk; gy ,uTfSk;
epfo Kbahj xd;iw tpUk;Gk; kdNjhL
ChpUf;Fe; jpir ghh;j;jgb fopAk;.
********************************                                  

re;jpj;jy;

re;jpg;gjw;nfd
xU ehspd; khiyiaj; Njh;e;Njd;

nfhQ;rk; ftpijfs;
fdpT+l;Lk; ,d;dpir
fhjypd; Rit fye;j NjePh;
thrid je;J tuNtw;f kyh;fs;
vy;yhk; Maj;jkhf.

mofpa khiyfSk;
fbfhuKk; ahUf;fhAq; fhj;jpUg;gjpy;iy

kQ;rs; khiy nkJtha;f; fWf;f
kzypw; guTk; ePnudg; gue;jJ ,uT

epfohJ Nghd tUifAk;
gfpug;glhj ftpijfSk;
nrhy;yg;glhj fhjYk;
gUfg;glhj NjePUk; thLk; G+f;fNshL
xt;nthU mofpa khiyapYk;
vq;Nfh xU tPl;bd; Njhl;lj;jpy; iftplg;gLfpd;wd.
*********************************
      
fhyk; ahUf;Fq; fhj;jpuhJ eOTfpwJ
ehw;wpirg; ghijfspy;
vjph;g;gLk; khe;jhpy; vtUk;
mwpe;jtuhapy;iy.
gazq;fspy;
flf;fpd;w gpuNjrq;fspd; Njrg; glq;fspy;
Kfthp gw;wpa re;Njfq;fSe; jPh;tjhapy;iy.
tpiuAk; thfdj;jpDhL njd;gLk;
CNuhuf; Fby;
ifairf;Fk; rpWkp
ahNuh iftpl;l xU tPL
ntNsnud;w nrk;kwpahl;Lf; $l;lk;
R+hpafhe;jpg; G+f;fs;
rpW gof; fil vd vy;yhNk
vg;NghNjh tpl;Lg; gphpe;jitfisAk;
mopf;fg;gLfpd;w xU tuyhw;iwAk;
Qhgf%l;Ltijj; jtph;f;f Kbtjpy;iy
*********************************

Friday, May 29, 2009

தமிழ்




தலைப்பிடாதவை

சிறு துணி போர்த்திக் கிடத்தியிருந்த
fhaq;fsw;w cly;
fhl;rpg; nghUshf.
gpw clyq;fs; kPJ G+j;Jhtpf; nfhb
Nghh;j;jpa mirtw;w iffs;
epiwNtwhf; fdT KbTwy; jfhnjd
%lhj fz;fs;
caph; Nghdhyd;wp
epyj;NjhL khdKkpoe;jJ
kwj;jy; $LNkh?

------------------------------

fhw;wpy; ntb kzj;NjhL
fye;J mk;khtpd; kzk;.
fhhpUspy;
ehd;
iffis
tapWfis
jiyfis
ePz;l gpd;dy;fis
ghjq;fis kpjpj;J
elf;fpNwd;.
vy;yhUf;Fk; vd;d ele;jJ?
INah> tpkhdr; rj;jk;.
mk;kh vg;NghJk; nrhy;tJ
tpOe;J gLntd;W.
ahUilaNjh nkd; tapW.
grpf;fpJ>
jz;zp tplha;f;FJ.
fhw;wpy; ntb kUe;J kzj;NjhL
mk;khtpd; kzk;.
Mdhy;
ve;jg;gf;fj;jpypUe;J?
kPz;Lk;
iffspy;
tapWfspy;
jiyfspy;
ePz;l gpd;dy;fspy;
ghjq;fspy;
jlf;fp tpOe;J
elf;fpNwd;.
mk;kh fpzj;jbapy;
ghj;jpuq; fOtpf; nfhz;bUg;gh. itfhrp> 2009

------------------------------
குறிப்பு: ஆழி பதிப்பகத்தார் வெளியிடவிருக்கும் கவிதைத் தொகுப்பிற்கு வழங்கிய கவிதைகள்